கடந்த வெள்ளியன்று அதிகாலை நண்பன் ஒருவன் தூங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி சொன்னான் "மச்சி மைகேல் ஜாக்சன் இறந்திட்டான்டா :(".. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்டிப்பாக மைகேல் ஜாக்சனின் இறப்பு செய்தி என் ஆழ்ந்த உறக்கத்தை கலைக்கக்கூடிய மிகப் பெரிய துக்க செய்தியாக எனக்குப்படவில்லை. பின் மாலை வேளையில் வேலை பளுவில் இருந்து என்னை விடுவித்துக்கொண்டு i-pod-ல் "Black or white" album கேட்ட போது தான், ஏன் இத்தனை பேர் சோகக்கடலில் மூழ்கி இருக்கின்றனர் என்று தெரிந்தது. இரவு கனவுகள் முழுதும் MJ நிறைந்திருந்தான்.. சோகம் என்னுள்ளும் புகுந்து கொண்டது..
இன்னொரு விஷயம்.. MJ இறந்ததை எனக்கு தெரியபடுத்திய நண்பனுக்கு ஆங்கிலம் தெரியாது.. சொந்த ஊர் மதுரை அருகில் ஒரு குக்கிராமம். தெரியப்படுத்தும் பொழுது அவன் கண்களில் கண்ணீர்..
Sunday, June 28, 2009
அஞ்சலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment