Monday, June 29, 2009

SSLC பரிட்சைகள் ரத்து.

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல், SSLC தேர்வுகளை ரத்து செய்வதைப்பற்றி தனது விருப்பத்தினை தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பில் ஒரு மாணவன் பெறும் மதிப்பெண் அவனது வாழ்வினை நிர்ணயிக்கும் சக்தியாக கருதப்படுவது மிகப்பெரிய அபத்தமாகும். நன்றாக படிக்கும் மாணவன் தனது பள்ளியில் தன் உயர் ஸ்தானத்தை தக்கவைக்கவும், 1000 / 2000 பரிசினை பெறவும், "மீண்டும் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்" என்ற தலைப்பு செய்தியை தவிர வேறு பயன்கள் எதுவும் இல்லாத தேர்வு இது. அதே சமயம், சுமாராகவோ படிக்கும் அல்லது சுத்தமாக படிக்காத மாணவனின் இளமனதில் தாழ்வு மனப்பான்மையை விதைக்க செய்கிறது. இதை பற்றிய விரிவான கட்டுரை பிறிதொரு நாளில்...

No comments: